Monday, May 31, 2010

இயல்பிழந்த நிலை


இயல்பிழந்த நிலையில்
இருக்கிறேன்
உன்னோடு
என்னை சேர்த்த காதலால்
-------
இயல்பிழந்த நிலையில்
இருக்கிறேன்
நடிக்க வேண்டிதானிருக்கிறது
அம்மாவின் பாசத்திலிருந்து
நண்பர்களின் ஆறுதலிருந்து
மற்றவர்களின் அனுதாபத்திலிருந்து
அவளின் ஏளன பார்வையிலிருந்து
மறைவாய் அழுதுதீர்த்த கண்ணீரிலிருந்து
நம்பிக்கை துரோகிகளின் போலிசிரிப்பிலிருந்து
ஊருக்கு பேசிவிட்டு உண்மையில் நடக்காத
உபதேசவான்களின் அறிவுரையிலிருந்து
தப்பிக்க

எப்பொழுதும் போலவே
சிரிக்கிறேன்
பேசுகிறேன்
எல்லாமும் செய்கிறேன்
கண்களை வற்ற செய்து

No comments:

Post a Comment