Thursday, May 20, 2010

சிறகொடிந்த மனது


பட்டாம் பூச்சி செடியின்
கீழ் நில்
நான் ரோஜா மரத்தின் கிளையோடு
வருகிறேன் என்றான்
காத்துக் கொண்டிருக்கிறேன்
இன்னமும் வரவில்லை

நிழல் தந்த வண்ணத்துப்பூச்சி எல்லாம்
என்னைவிட்டு பறந்துபோகிறது
அவன்போன திசைபக்கமாக

இந்த வருடம் அவன்வர
வாய்ப்பிருக்கிறது
இந்நேரம் அந்தச்செடி மரமாய்
வளர்ந்திருக்கும்

No comments:

Post a Comment