பட்டாம் பூச்சி செடியின்
கீழ் நில்
நான் ரோஜா மரத்தின் கிளையோடு
வருகிறேன் என்றான்
காத்துக் கொண்டிருக்கிறேன்
இன்னமும் வரவில்லை
நிழல் தந்த வண்ணத்துப்பூச்சி எல்லாம்
என்னைவிட்டு பறந்துபோகிறது
அவன்போன திசைபக்கமாக
இந்த வருடம் அவன்வர
வாய்ப்பிருக்கிறது
இந்நேரம் அந்தச்செடி மரமாய்
வளர்ந்திருக்கும்