Wednesday, March 3, 2010

சாரு நீங்க என்ன லூசா ?


சாரு நீங்க என்ன லூசா ?

//நான் எதற்கு என் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டும். எந்த அயோக்கியனாவது எதையாவது செய்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்? விடியோ பொய் என்று சொல்லும் அளவுக்கு நான் முட்டாள் கிடையாது. நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள்? ஒரு அயோக்கியனை நம்பியதற்காக நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?//

உங்களை யாரும் தற்கொலை செய்து கொள்ள சொல்லவில்லை நீங்களாகவே இப்படி எதாவது கிளப்பிவிட்டு அனுதாபத்தை பெற முயலாதீர்கள் சாரு நிவேதிதா..வழக்கம் போல் இதிலும் உங்கள் வேலையே காட்டுகிறீர்கள் ஒரு ஏழை எழுத்தாளன் இரண்டாயிரம் ரூபாயை கொடுத்து அவரை பார்க்க்பபோவாரா? உங்களை மதித்து வந்து படித்தவர்கள்தான் நீங்கள் செய்த கொள்கை பரப்பும் செயலாளர் வேலையை நினைத்து நொந்துகொள்ள வேண்டும்.

\\இப்போது நாம் பிரச்சினைக்குள் செல்வோம். நேற்று இரவு ஹமீது போன் செய்து விஷயத்தைக் கூறினார். அப்போது மன்ஹாட்டன் பாரில் விவேக் நாராயணன் என்ற ஆங்கில எழுத்தாளருடன் தில்லியில் நடக்க இருக்கும் சர்வதேச எழுத்தாளர் கருத்தரங்கு பற்றி விவாதித்துக் கொண்டிருந்தேன். பிறகு வீட்டுக்கு வந்து தொலைக்காட்சியைப் பார்த்த போது விஷயத்தைத் தெரிந்து கொண்டேன். ஆம், விஷயத்தைத் தெரிந்து கொண்டேன். அதிர்ச்சி அடையவில்லை. ஒரு நிறுவனத்தில் இருக்கும் எல்லா விதமான பிரச்சினைகளும், ஊழல்களும் நித்யானந்தரின் ஆசிரமத்திலும் உண்டு என்பது என் கவனத்துக்கு வந்தது. அதன் காரணமாக, நான் ஆசிரமத்திலிருந்து விலகியே இருக்க விரும்பினேன்; இருந்தேன். ஆனால் நித்யானந்தரின் அளப்பரிய வித்யாஞானத்தால் அவரோடு மட்டும் அவ்வப்போது உரையாடி வந்தேன்//


இன்னும் நீ திருந்தலையா........!? அதை கேட்ட உடனே அதிர்ச்சி அடையவில்லை என்றால் எல்லாம் முன்பே தெரிந்திருக்கிறது உங்களுக்கு அதனால்தான் திட்டமிட்டு அந்த ஜந்துவை பற்றி எழுதிய எல்லாவற்றையும் நீக்கிவிட்டு நாடகம் நடித்துக் கொண்டு வருகீர்கள். உங்களுக்கு ஏற்கனவே அங்கு நடக்கும் எல்லாம் தெரிந்திருந்தும் ஏன் இவ்வளவு நாள் அதை எல்லாம் வெளியே சொல்லவில்லை?அந்த நித்யானந்தன் இப்பொழுது சிக்கவில்லை என்றால் நீங்களும் உங்களுக்கு தெரிந்திருந்த உண்மையை வெளியிட்டு இப்படி வாக்கு மூலம் கொடுத்திருக்க மாட்டீர்கள் அப்படித்தானே? அவன் மாடிக் கொண்டதால் நானில்ல நானில்ல எங்கப்பன் புதருக்குள் இல்லை என கணக்கில் சும்மா கக்கரிங்க.....

\\ஆனால் நித்யானந்தரின் அளப்பரிய வித்யாஞானத்தால் அவரோடு மட்டும் அவ்வப்போது உரையாடி வந்தேன்// இன்னுமா அவகிட்ட "அளப்பரிய வித்யாஞானத்தால்" ஐயோ ஐயோ அப்படி அவன்கிட்ட என்ன இருக்கிறது எழுந்திரிக்கவே மாத்திரை போடும் அவன். ...............!?

//மேலும், நித்யானந்தரின் பக்த கோடிகள் அனைவருமே ஏதோ மந்திரித்து விட்ட ஆட்டு மந்தைகளைப் போல் அவர் பின்னே திரிந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எது பற்றியும் சுயமான சிந்தனையே இல்லை. நித்யானந்தர் எதைச் சொல்கிறாரோ அதைக் கண்ணை மூடிக் கொண்டு நம்பினார்கள். பல லட்சக்கணக்கான அவருடைய பக்த கோடிகளுக்காக நித்யானந்தர் ஒருவரே சிந்தித்தார்.//

அப்போ அந்த மந்தையில் நீங்களும் ஒருவர். உங்களுக்கும் சுயமான சிந்தனையில் இல்லாமல்தான் அவர் பற்றிய கொள்கைகளை கூவி கூவி சொல்லிக் கொண்டு வருகிறீர்கள் இப்பொழுதும் கூட. அவன் என்ன சிந்தித்து கிழித்தான் எப்படி எங்கும் எவளுடன் திருட்டுத்தனமாக படுக்கலாம் என சிந்தித்து சிந்தித்து இப்போ அவன் சிரிக்கும் பொருளாக அவதாரம் எடுத்துள்ளான்.

//அவரது சீடர்களில் பலருக்கு ஆச்சாரியார் என்ற பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்குத் துறவறம் ஒரு அவசியத் தகுதியாக வைக்கப்படவில்லை. அந்த ஆச்சாரியார்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள். அந்த ஆச்சாரியார்களின் உரைகள் அவ்வளவும் பேத்தலாக இருந்தன. அதனால் அந்த ஆச்சாரியார்களின் பக்கமே நான் திரும்பிப் பார்க்காமல் இருந்தேன். உதாரணமாக, ஒரு பெண் ஆச்சாரியார் உலகம் முழுவதுமே மங்களமாக உள்ளது என்று லெக்சர் கொடுத்துக் கொண்டிருந்தார். அபத்தக் களஞ்சியமாக இருந்ததால் நான் எழுந்து வெளியே போய் விட்டேன். பிறகு அந்தப் பெண் என்னை சந்தித்த போதும் அதையே உளறிய போது “அப்படியானால் கும்பகோணத்தில் ஒரு குடிசைப் பள்ளிக்கூடம் எரிந்து 90 குழந்தைகள் எரிந்து போனார்களே, அதுவும் மங்களமா?என்று கேட்டேன். ஆமாம் என்று மேலும் உளறினார் அந்தப் பெண்.//

துறவறம் அவசியமில்லை உங்களைப்போலவே அவர்களும் இருந்திருக்கலாம். ஆச்சாரியர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள். அவர்களின் உரை பேத்தலாக இருந்தது. அதனால் அவர்கள் பக்கமே நீங்கள் போகவில்லை தொநூறு குழந்தைகள் இறந்ததைக் கூட மங்களம் என சொல்லும் அபத்த களஞ்சியங்கள் இவ்வளவு நாளாக அறிவுக் களஞ்சியங்களாக உங்களுக்கு புலப் பட்டத்தின் சக்தி என்னவோ?

//மேலும், நித்யானந்தரின் ஆன்மீகம் முழுமையாகவே இந்து மத சம்பிரதாயங்களையே அடிப்படையாகக் கொண்டிருந்ததால் இஸ்லாமியக் கலாச்சாரப் பின்னணியைக் கொண்ட என்னால் அதனுடன் ஒன்ற முடியவில்லை. உதாரணமாக, நித்யானந்தரின் வழிமுறையில் ‘சொஸ்தப்படுத்துபவர்கள்என்று ஒரு பிரிவு உண்டு. அந்தப் பயிற்சியை யார் வேண்டுமானாலும் எடுத்து ஹீலராக ஆகி விடலாம். நித்யானந்தரின் மேல் மிகுந்த பற்றுக் கொண்ட என்னையும் ஹீலராக ஆகச் சொல்லி பலரும் கேட்டனர். நிர்மலாவும் (முன்னாள் ராக சுதா) பலமுறை என்னிடம் இதுபற்றிக் கேட்டார். அதில் உள்ள ஒரு பிரச்சினை என்னவென்றால், இந்தப் பயிற்சியை எடுத்தால் நீங்கள் சைவ உணவுக்காரராக மாற வேண்டும். மது அருந்தக் கூடாது. அப்போது நான் நிர்மலாவிடம் சொன்னேன்: நான் கலாச்சார ரீதியாக இஸ்லாமியப் பின்னணியைக் கொண்டவன். என்னால் மாமிசம் உண்ணாமல் இருக்க முடியாது.//

நீங்கள் இதுவரை இஸ்லாம் மதத்தை பற்றி இஸ்லாம் மதத்தைப் பற்றி என்ன எழுதி கிழித்திருக்கிறீர்கள் சாரு? எத்தனை முறை ஜிம்மாவிற்கு/ பள்ளிவாசலுக்கு சென்று தொழுகை செய்திருக்கிறீர்கள்?நீங்கள் அப்படி தொழ கூட வேண்டாம். இஸ்லாம் மதத்து உறவினர்களுடன் எப்படி பழகுகிறீர்கள் ஏன் இதுவரையில் மெக்கா படத்தை உங்கள் தளத்தில் பதிவேற்றவில்லை?மரியாதைக்குரிய திரு.மனுஷ்ய புத்திரன் அவர்கள் தரும் பிரியாணியை சாப்பிடுவதால் நீங்கள் இப்படி எல்லாம் புருடாவிடுவது சரியில்லை இதுதான் நித்யானந்தர் கற்றுக் கொடுத்த பாடமா? நீங்கள் கலாச்சாரத்தில் இஸ்லாமிய பின்னணி கொண்டவன் என்று சொல்கிறீர்கள். அந்த பொறம்போக்கு பையன் நித்யானந்தரின் கொள்கையையும் உலகிற்கு பரப்பி வருகிறீர்கள் என்னதான் சொல்கிறீர்கள் முடிவாக நீங்கள்? இப்படி குழப்பவாதியாக குழப்ப வேண்டாம் எல்லோரையும்.

//மேலும், பல முன்னாள் நீலப்பட நடிகைகள் வெள்ளை ஆடை உடுத்திக் கொண்டு ஆசிரமத்தில் வலம் வந்து கொண்டிருந்தனர். அது எனக்கு ஒருவித அசூயையை அளித்தது. நாம் என்ன வேண்டுமானாலும் அயோக்கியத்தனம் செய்து பணம் சம்பாதித்து விட்டு நம்முடய குற்ற உணர்ச்சியைப் போக்கிக் கொள்ள ஒரு சாமியாரைப் பிடித்துக் கொண்டால் போதுமா? இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள் என்னை நித்யானந்தரிடமிருந்து ஒதுங்கச் செய்து கொண்டிருந்தன.//

சரி நீலப்படம் நடிப்பவர்கள் வெள்ளை ஆடை உடுத்தக் கூடாது என எந்த சர்வாதிகார சட்டம் சொல்கிறது. அவர்கள் என்ன அயோக்கியத் தனம் செய்தார்கள் நீலப்படம் நடிப்பது அவர்களின் தொழில் நீலப்படம் பார்க்கும் கம்முனாட்டிகளை உங்கள் அகராதில் என்ன புனிதர்கள் என சொல்வீர்களா? இப்படி ஏகப்பட்ட பிரச்சனை இருந்த நித்யானந்தரிடம் ஏன் நீங்கள் அறவே முன்பே விலகவில்லை?

//என்னுடைய ஆங்கிலச் சிறுகதையில் இது பற்றிய என் மன வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறேன். வாசகர்கள் யாரும் படித்துப் புரிந்து கொண்டார்களா என்று தெரியவில்லை.//

ஏன்.......... சாமி அவருடைய எல்லா சக்திகள் பற்றியும் தமிழில் எழுதி பிரச்சாரம் செய்த அடியேனாகிய நீங்கள் ஏனைய்யா ஆங்கில சிறுகதை ஒன்றில்உங்களுடைய மனவருத்தத்தை வெளிப்படுத்த வேண்டும்? உங்களுடைய வாசகர்கள் படித்து புரிந்து கொண்டார்களா/கொள்வார்களா? என்ற சந்தேகத்துடன் இருக்கும் ஒன்றை ஏன் நீங்கள் எழுத வேண்டும்? அதற்கு நீங்கள் அதை எழுதாமலே இருந்திருக்கலாம்.

\\இப்போது இந்த செக்ஸ் பிரச்சினை. இந்த விடியோக்கள் எதுவும் பொய்யாகத் தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் இத்துறையில் வல்லுநர்களாக இருப்பவர்கள் இந்நேரம் எளிதில் கண்டு பிடித்துச் சொல்லியிருப்பார்கள். இதைப் பார்த்து நான் அதிர்ச்சி அடையவில்லை. ஆச்சரியப்படவில்லை. காவி கட்டியவர்கள் செய்யும் கயவாளித்தனங்களை நாம் பார்ப்பது இதுவா முதல் தடவை? நான் திருவண்ணாமலை சித்தரிடம் ஏமாந்த போதே பல வாசகர்கள் நித்யானந்தரைப் பற்றி எச்சரித்து, இவர் பற்றியும் உங்களுடைய (வசை) கட்டுரையை எதிர்பார்க்கிறோம் என்று சொன்னார்கள். அவர்கள் வாய்க்கு சர்க்கரை தான் போட வேண்டும். ஆனால் இனிமேல் ஏமாற மாட்டேன். ஏனென்றால், இனிமேல் சாமியார், சித்தர் என்று யார் பின்னாலும் செல்ல மாட்டேன்.//

எப்பா........... உண்மைதான் என கண்டுபிடித்து சொல்லிவிட்டார் நித்யானந்தரின் அருளால். எல்லோருக்கும் இனிமேலாவது நம்புங்கள் அந்த ஒளிநாடா (வீடியோ ) உண்மையானதுதான். நீங்கள் ஏன் அதை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் படவேண்டும் நீங்கள் சொல்வது நியாயம் தானே புதிதாக பார்ப்பவர்களுக்கும் கேட்பவர்களுகும்தான் அதெல்லாம் ஏற்படும். முன்னமே தெரிந்த உங்களுக்கு அதெல்லாம் வந்தால்தான் வியப்பு. திருவண்ணாமலை சித்தரிடம் ஏமாந்த போதே உங்களுக்கு நல்ல புத்தி வந்து திருந்தி இருக்கவேண்டும். பிறகெதற்கு நித்யானந்தா என்ற பொய்யனின் துதி பாடினீர்கள், அதுவும் வாசகர்கள் எச்சரித்தும் சாரு? இனிமேல் நீங்கள் இல்லை நாங்கள் ஏமாற மாட்டோம் உங்களிடம் .....அநேகமாக அடுத்த சாமியார் பற்றிய துதியை நான் இன்னும் சில நாட்களிலோ மாதங்களிலோ உங்களிடமிருந்து எதிர்ப்பார்கிறேன் சுவாமி. இப்பொழுது மட்டும் நாம் என தமிழ்நாட்டு மக்களின் கொடி பிடிப்பது ஏன் ?வேண்டுமென்றால் எங்களை அனைத்துக் கொள்வீர்கள் நீங்கள் தப்பிக்க.....? என்ன நியாயம் தப்பி ஓடிய நித்யானந்தரிடம் இது பற்றி கேட்டு சொல்லவும்..

\\பல வாசகர்கள் எனக்கு ஆறுதல் சொன்னார்கள். அவர்களையெல்லாம் மனசுக்குள் நன்றாகத் திட்டினேன். அவர்கள் ஆறுதல் சொல்லும் அளவுக்கு எனக்கு என்ன சோகம் நடந்தது? எந்தக் கயவாளிப்பயலோ எவள் குண்டியையோ நக்கினால் எனக்கு என்ன? ஆனால் அந்தக் கயவாளியை நான் நம்பி விட்டேன். என்னால் பல ஆயிரம் பேர் நம்பி விட்டார்கள். சரி, கபட சந்நியாசி என்று தெரிந்து விட்டது. தூக்கிப் போட்டு விட்டேன். எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இவ்வளவு ஏமாந்தும் இன்னமும் ஏமாளியாக இருக்கிறோமே என்ற சுய பச்சாதாபம் மட்டுமே கொஞ்சமாய் மனதில் தோன்றுகிறது.//

ஏன்பா.... இப்போ அவருக்கு என்ன நடந்துவிட்டது ஏன் எல்லோரும் அவருக்கு ஆறுதல் சொல்கிறீர்கள் ?முடிந்தால் இந்த சந்தோஷத்தை கொண்டாட அவருக்கு பிடித்த விலையுர்ந்த ஒயின் வாங்கிக் கொடுங்கள். உங்களைப் பற்றி பக்கம் பக்கமாக புகழ்வார்........... என்னை மன்னித்து விடுங்கள் நான் ஒரு ஏழை வாசகன் என்னால் அந்த அளவிற்கு உங்களுடன் சேர்ந்து வாழ்க்கையை கொண்டாட முடியாது....

//ஒரு வாசகர் அழுதார். கோபப்பட்டார். நடிகையின் பெயரைச் சொல்லி அவள் அவனுக்கு ப்ளோ ஜாப் செய்கிறாள் சாரு; இவனை ஜெயிலில் போட வேண்டும்என்று ஆவேசப்பட்டார். இந்தக் காரணத்துக்காக ஒருவரை ஜெயிலில் போட வேண்டும் என்றால் நம் வாழ்நாள் முழுவதையும் ஜெயிலில்தான் கழிக்க வேண்டும் என்றேன். விஷயம் என்னவென்றால், அவர் காவியைக் கட்டிக் கொண்டு அந்த வேலையைச் செய்கிறார். நாம் வெள்ளை வேஷ்டியைக் கட்டிக் கொண்டு செய்கிறோம்.//

என்னதான் இருந்தாலும் விசுவாசம் போய்விடுமா உங்களுக்கு? அது வெளிப்படுகிறது பாருங்கள் உங்களுக்கு அற்புதம். அந்த நித்யானந்த என்ற பொறுக்கி என்ன செய்துவிட்டான். அவன் செய்வதை யாரும் குற்றம் என சொலி இருக்க மட்டார்கள். எப்படி இருந்தால் தெரியுமா ?
அவன் வேட்டி கூட கட்டிக் கொள்ள வேண்டாம். லுங்கி கட்டி இருந்தால் கூட போதும். ஏன் அது கூட வேண்டாம் அவன் போட்டிருந்தானே ஒரு ஜட்டி அது மட்டும் கூட அணிதிருந்தால் போதும். இன்னும் சொல்லப் போனால் அவன் காவியை அணிந்து கொண்டு கூட அப்படி செய்திருக்கலாம்.
ஆனால் நான் ஒரு பிரம்மச்சாரி, ஞானி, பெரிய புடிங்கி............... என அப்பாவி மக்களிடம்
புலுவாமல் இருந்திருந்தால்.....

//நித்யானந்தர் தன்னை ஒரு பிரம்மச்சாரி என்றும், ஞானி என்றும், இந்திய ஞான மரபில் வந்தவர் என்றும், ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமணர் போன்றவர்களின் வாரிசு என்றும் சொல்லிக் கொண்டார். இப்படிச் சொல்லி லட்சக்கணக்கான மக்களை நம்ப வைத்து அவர்களை ஏமாற்றினார். அவரை நம்பி பல இளம் பெண்கள் சந்நியாச வாழ்வை மேற்கொண்டனர். ஒரு பத்திரிகை அதிபரிடம் நான் நித்யானந்தரின் அருமை பெருமை பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன விஷயம் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அவருக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த கணவனும், மனைவியும் நித்யானந்தரின் சீடர்கள். அவர்களின் ஒரே செல்ல மகள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே நித்யானந்தரின் ஆசிரமத்தில் துறவியாகச் சேர்ந்து விட்டாள். அதனால் அந்தக் குடும்பமே சிதைந்து போனது.//

சாரு ஏன் இவ்வளவு நாள் இதை எல்லாம் எங்களிடம் சொல்லவில்லை?

//போகட்டும் என்கிறார் நித்யானந்தர். புத்தர் துறவியாகவில்லையா என்று கேட்கிறார். புத்தர் என்ன நடிகைகளின் குண்டியையா நக்கினார் என்று இப்போது எனக்குக் கேட்கத் தோன்றுகிறது.//

அதேதான் நாங்களும் கேட்கிறோம் சாரு. இவன் புத்தர் என்ற அளவில் பேசி இருக்கிறான் நீங்கள் அதை உங்கள் புத்தியில் ஏற்றுக்கொண்டு இருந்துவருகிறீர்கள்...... விதி வலியது எனபது உண்மைதானோ?

எனக்கும் ஒருமுறை இதுபோல் நடந்தது. நான் வைரஸ் ஜுரம் வந்து தனியாக, அநாதையாக என் வீட்டில் படுத்துக் கிடந்த போது என் மனைவி நித்யானந்தரின் ஆசிரமத்தில் இருந்தாள். அப்போது ஆசிரமத்துக்குத் தகவல் அனுப்பிய போது “ஐயாவுக்கு சரியாகி விடும்என்று ‘சாமிசொன்னதாக செய்தி வந்தது. அப்போதே துணுக்குற்றேன். படுக்கையிலிருந்து எழுந்து கொள்ளவே முடியாத என்னை ஹமீது தான் ஆள் அனுப்பி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவி என்னைக் காப்பாற்றினார். ஒரு வாசகி எனக்கு கஞ்சி அனுப்புவார். அந்தக் கஞ்சிப் பாத்திரத்தைத் திறக்கத் தெம்பு இல்லாமல் ஒருநாள் அரை மணி நேரம் போராடினேன். இப்படித் தொடர்ந்து பிரச்சினைகளாகவே இருந்ததால் நித்யானந்தரிடமிருந்து சிறிது சிறிதாக விலக ஆரம்பித்தேன். அவருடைய நூலின் மொழிபெயர்ப்பிலிருந்து என்னை டிசம்பரிலேயே விடுவித்துக் கொண்டேன். அதற்குப் பிறகும் நித்யானந்தரின் புத்தக வெளியீட்டுப் பிரிவிலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை எடுப்பதை நிறுத்தினேன்.

இதுக்கப்பறமும் முடியல................ இதையும் நாங்கள் நம்ப வேண்டுமா நம்புகிறோம். உங்களுக்கு உதவி செய்தவர்கள் பற்றி சொன்னதை. ஐயாவுக்கு சரியாகிவிடும் என சாமி சொன்னது போலவே சரியாச்சா? இல்லை மருத்துவமனைக்கு போனதால் சரியாகியதா?

//நித்யானந்தரிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு நான் அவரைப் பற்றிப் புகழ்ந்து எழுதுவதாக இலக்கியத்தில் மாமா வேலை செய்து கொண்டிருக்கும் ஒருவர் எழுதியிருக்கிறார். ஒரு லட்சம் கொடுத்தாலே சினிமாக்காரனின் குண்டியை நக்கத் தயாராக இருக்கும் இவர்களைப் போன்றவன் நான் அல்ல. நித்யானந்தரின் கூட்டத்துக்குப் போக வேண்டுமானால் கூட ஆயிரம் ரெண்டாயிரம் என்று பணம் கொடுத்து விட்டுத்தான் சென்றிருக்கிறேன். இன்னமும் நித்யானந்தரின் புத்தக வெளியீட்டுப் பிரிவு எனக்கு 4000 ரூ . பாக்கி. அவருடைய எழுத்தை டைப் செய்து கொடுக்கும் டைப்பிஸ்ட் என்னை வந்து பணம் கேட்ட போது ஆசிரமத்தின் பப்ளிகேஷன் டிவிஷனில் ‘நீங்கள் கொடுத்து விடுங்கள்; நாங்கள் உங்களுக்குக் கொடுத்து விடுகிறோம்என்று சொன்னதால் கொடுத்தேன். இன்னமும் அந்தப் பணம் வந்து சேரவில்லை.//

அவர் சினிமா காரர்களின் குண்டியை நக்குவதை நீங்க நேரில் பார்த்தீர்களா? எந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி உலகமே சிரித்துக்கொண்டிருக்கிறது. இலக்கியத்தில் மாமா வேலை எல்லாம் செய்ய முடியும் என்பதை சற்று எலோருக்கும் விளக்கவும். இங்கு நீங்கள் அவர் ஒரு லட்சம் வாங்கியதை நீங்கள் ஆதாரத்துடன் நிருப்பித்திருப்பது போல நீங்கள் பணம் வாங்கிக் கொண்டு எழுதுவதையும் அவர் ஆதாரத்துடன்தான் சொல்லி இருக்க முடியும். ஆரம்பித்துவிட்டீர்கள் "ஸ்டார் விஜயில்" நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு காசு கொடுக்கவில்லை என்று சொல்லி விட்டு மீண்டும் கலந்து கொண்டீர்களே அதுபோல இங்கும் தொடர்கின்றது.

//ஒருவரை ஏமாற்றினாலே சிறைத் தண்டனை உண்டு. ஆனால் இந்தக் கபட சாமியார் லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றியிருக்கிறார்.//
நீங்க சொல்றது எல்லாம் நெசந்தானுங்களா ?

\\ஒரு பெண்ணுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது ஒருவருடைய அந்தரங்கமான விஷயம். அதில் தலையிட நமக்கு உரிமை இல்லை. ஆனால் நித்யானந்தர் மிக உயரிய ஒழுக்கக் கோட்பாடுகளைப் பற்றிப் பேசி விட்டு இப்படி ப்ளோ ஜாப் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். மற்ற எல்லா விஷயங்களிலும் ஓஷோவின் சிந்தனைகளையே தன்னுடையதாக எடுத்துக் கொண்ட இந்த நித்யானந்தர் ஓஷோவின் செக்ஸ் வாழ்க்கையை ஏன் விட்டு விட்டு அதை மட்டும் ரகசியமாக வைத்துக் கொண்டார்? பிரேமானந்தரிலிருந்து தமிழ்நாட்டு சாமியார்கள் அத்தனை பேரும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்?//

இதையும் கேட்டுக்கொள்கிறோம் சுவாமி.......

//இப்போது நித்யானந்தரை விமர்சிக்கும் எல்லோரும் ஒரு விஷயத்தை விட்டு விடுகிறார்கள். அல்லது, அதைக் காணத் தவறுகிறார்கள். நித்யானந்தரிடம் ஒரு பெரும் சக்தி இருக்கிறது. அவரால் புற்றுநோயை குணப்படுத்திக் கொண்டவர்கள் பலரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். தன்னுடைய அளப்பரிய சக்தியை வைத்துக் கொண்டுதான் அவர் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார். அவர் உருவாக்கிய நித்ய தியான் என்ற தியானத்தைச் செய்தால் நமக்கு எந்த ஆரோக்கியக் குறைவும் ஏற்படாது. அதற்குக் காரணம், அவர் அதையெல்லாம் உருவாக்கியது பதஞ்சலியின் யோக சூத்திரத்திலிருந்துதான். ஆனால் நித்யானந்தர் தனது அளப்பரிய சக்தியை நடிகைகளின் குண்டியை நக்குவதற்கும் பயன்படுத்திக் கொண்டார் என்பதுதான் இப்போதைய பிரச்சினை.//

இன்னமும் துதி பாடிக் கொண்டிருக்கும் உங்களை நினைத்தால் அரிக்கிறது அந்த இடத்தில் .....

//ஆனால் அவருடைய ஆசிரமத்தில் இருப்பவர்கள் அனைவரும் மந்திரித்து விட்ட ஆடுகள். ஊடகங்களில் ‘சாமியைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் போட்டு சாமிக்கு சோதனை கொடுத்துக் கொண்டிருப்பதாக அழுது கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அழுது கொண்டிருக்கும் போது நித்யானந்தரின் தனியறையில் ஏதாவது ஒரு நடிகை அவருடைய ஆண்குறியை சுவைத்துக் கொண்டிருக்கலாம்.//

நீங்க மட்டும் என்ன செய்கிறீர்கள்? இன்னமும் புற்று நோயை குணப் படுத்தியதாகத்தான் எல்லோரிடமும் சொல்லி அழுகின்றீர்கள்.......

"உங்கள் கூற்று படி டிசம்பர் 2009 முடிவில் ஞானம் வந்து நித்யானந்தரை விலக ஆரம்பித்தாலும், இரண்டு 'கடவுள் கண்டேன்' தொடர்களை அதன் பின் விட்டீர்கள். ஒருவேளை விலக ஆரம்பிக்கும் முன் எழுதியதாக இருக்கும். "

இப்போதும் சொல்கிறேன், நித்யானந்தர் எழுதிய புத்தகங்கள் 300 இருக்கும். அத்தனையும் நம் இந்திய ஆன்மீகத்தின் சாரம். கீதைக்கு அவர் எழுதியிருக்கும் பிரம்மாண்டமான உரை ஒரு அற்புதம். நித்யானந்தர் ஒரு முட்டாள் அல்ல; நூறு மேதைகளுக்கு சமமான அறிவுத் திறன் கொண்டவர். அந்த அறிவுத் திறனை அவர் சொத்து சேர்க்கவும், நடிகைகளுடன் சல்லாபம் செய்யவும் பயன்படுத்திக் கொண்டு விட்டார். கோடிக்கணக்கானவர்களை அவர் இவ்வாறு ஏமாற்றியிருக்கிறார். உதாரணமாக, என் மனைவி அவந்திகா இப்போதெல்லாம் வெங்காயம், பூண்டு, இஞ்சி, உப்பு என்று எதுவுமே பயன்படுத்தாமல் அவித்த காய்கறிகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். இப்போதெல்லாம் ...

நாங்க நம்புகிறோம் ஐயா நித்யானந்தரின் சக்தியை இப்பொழுது முழுமையாக நம்புகிறோம்.. அட பெருமாளே சாருவிற்கு என் இந்த நிலைமை ...... ?

10 comments:

  1. போலி சாமியார்களை விட போலி பக்தர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். http://3.ly/Xkjr

    ReplyDelete
  2. எருமை தோலுக்கு மழை பெய்தால் சொரணை இருக்காது நண்பரே!

    ReplyDelete
  3. நான் கஷ்டப்பட்டு இதை எழுதலாம் என்று நினைத்தேன். நீங்களே எழுதிட்டீட்டீங்க. நன்றி..

    ReplyDelete
  4. //வால்பையன் said...
    எருமை தோலுக்கு மழை பெய்தால் சொரணை இருக்காது நண்பரே!//

    மழை மட்டுமல்ல வெயில் அடித்தாலும்!

    ReplyDelete
  5. டக்ளஸ் அண்ணே! பய புல்ல தெரியாம பொய்ய சொல்லிட்டான்.....


    இந்த பின்னூட்டம்தான் எங்கோ படித்ததாக கேள்வி.

    குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு, விடுங்க பாஸு இவனெல்லாம் ஒரு ஆளுன்னு

    ReplyDelete
  6. http://tavusarpandi.blogspot.com/2010/03/blog-post_03.html

    ReplyDelete
  7. பேன்ட் அவுந்த இந்த மனுசனப் பாத்து ஊரே சிரிச்சாலும், சைடுல எப்படியாவது 'உத்தம தமிழ் எழுத்தாளர'த் தாக்கிட்டுப் போயிடுராருப்பா.

    ReplyDelete
  8. இதாங்க பிரிச்சு மேயறது...ராஜனுக்கு கொஞ்சம் கூட சளைச்சுகாம, சாருவ அடிச்சிருக்கீங்க...சொக்கா கீதுமே...!!

    ReplyDelete
  9. ////நீங்கள் இதுவரை இஸ்லாம் மதத்தை பற்றி இஸ்லாம் மதத்தைப் பற்றி என்ன எழுதி கிழித்திருக்கிறீர்கள் சாரு? எத்தனை முறை ஜிம்மாவிற்கு/ பள்ளிவாசலுக்கு சென்று தொழுகை செய்திருக்கிறீர்கள்?நீங்கள் அப்படி தொழ கூட வேண்டாம். இஸ்லாம் மதத்து உறவினர்களுடன் எப்படி பழகுகிறீர்கள் ஏன் இதுவரையில் மெக்கா படத்தை உங்கள் தளத்தில் பதிவேற்றவில்லை?மரியாதைக்குரிய திரு.மனுஷ்ய புத்திரன் அவர்கள் தரும் பிரியாணியை சாப்பிடுவதால் நீங்கள் இப்படி எல்லாம் புருடாவிடுவது சரியில்லை இதுதான் நித்யானந்தர் கற்றுக் கொடுத்த பாடமா? நீங்கள் கலாச்சாரத்தில் இஸ்லாமிய பின்னணி கொண்டவன் என்று சொல்கிறீர்கள். அந்த பொறம்போக்கு பையன் நித்யானந்தரின் கொள்கையையும் உலகிற்கு பரப்பி வருகிறீர்கள் என்னதான் சொல்கிறீர்கள் முடிவாக நீங்கள்? இப்படி குழப்பவாதியாக குழப்ப வேண்டாம் எல்லோரையும். //// This shot is enough to admit him in keelpaakaam mental hospital. He is surely a bull shit psycho. Remaining all just confirms it.

    ReplyDelete
  10. சாணி பற்றி....( Sory .. Typo Error ) சா.நி பற்றி
    எழுதியிருக்கீங்களே...

    யாருங்க இந்த பீஸு...
    ப்ளீஸ் சார், யாராவது சொல்லுங்களேன்

    ReplyDelete